ஆண்டாள் அரங்கக்குப் பன்னு திருப்பாவை :
அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப் பான்னு திருப்பாவை பல்பதியம் - பராசர பட்டர் திருவாக்குப்படி திருப்பாவை 30 ம் திருவரங்கன் விஷயமானவை . எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.
1. நாராயணன் - ஸக பத்நியா விசாலாக்ஷியா நாராயண உபாகமது - வால்மீகி வாக்குப்படி ரங்கநாதன் தான் ஜகந்நாதன் - பெருமாள் ஆராதித்த பெரிய பெருமாள்.
2. பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் - கார்ய வைகுண்டத்திலுள்ள க்ஷீராப்தி நாதன்தனான வியூக வாசுதேவன்தான் ஸ்ரீ ரங்கத்துக்கு பிரதானம் - பிரத்யக்ஷ பரமம் பதம் ஸ்ரீரங்கம்.
3. திங்கள் மும் மாரி - லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் என்று குருபரம்பரையில் பிரதம குருவாய் நின்று ரஹஸ்ய த்ரியங்களை ஸ்ரீரங்க நாச்சியாருக்கு உபதேசிக்க, அவள் வழி விஸ்வக்ஷேனர் , நம்மாழ்வார் உபதேசித்த கிரமம் - மும்மாரி
4. ஆழி மழை - சார்ங்கம் உதைத்த சரமழைபோல் என்று சார்ங்கவில் சேவகனாக இராமபிரானைப் பற்றி பிரஸ்தாவம் இதில். - ராமோ த்விர் நாவிபாஷதே என்று கத்யத்தில் நம்பெருமாள் தன்னை ராமனாகக் கொண்டு சொன்ன வார்த்தை .
5. மாயனை - அரவின் அணைமிசை மேயமாயனார் என்று திருப்பாணாழ்வார் சொன்ன தாமோதரன் பெரிய பெருமாள்தானே.
6. முனிவர்களும் யோகிகளும் ஹரி என்று - சிற்றெயிற்று முற்ற மூங்கில் அற்ற பற்றர் வாழும் அந்தணீர் அரங்கன் - விமானத் தூண் ஹ + ரி என்ற வாசகத்தோடே ஆனது .
7. கீச்சு கீசு - கிளிச் சோழன் கிளி மண்டபம் இங்குதான் உண்டு.
8. தேவாதி தேவன் - தேவரையும் அசுரனையும் திசைகளும் படைத்தவனே யாவரும் வந்து அடி வணங்க அரங்கநகர் துயின்றவனே என்று குலசேகர ஆழ்வார். தேவாதி பிரம்மா அவன் ஆராதனம் செய்த பெரிய பெருமாள். செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார் - ஆண்டாளுக்கு.
9. மாமாயன் மாதவன் வைகுந்தன் - அரங்கன் அழகிய மணவாளன் நம்பெருமாள் என்ற மூன்றும் பரத்வம் ஸ்ரீயப்பதித்வம் சௌலப்யத்துக்கான திருநாமங்கள் தானே.
10. மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் - லோகாசாரங்க முனி திருப்பாணாழ்வார் விஷயமாக அபசாரப்பட, பின் அவர் திருவாராதனத்துக்கு வந்த போது அரங்கன் சன்னதி கதவு திறக்காமல் மௌனியாய் காலம் தாழ்த்தி, பிறகு ஆழ்வாரை எழுந்தருள பண்ணி அவருக்கு அதுவரை திறவாத வாசலை திறந்துவிட்டவன் அரங்கன்.
11. முற்றம் புகுந்து - அரங்கன் முற்றம் சேறு செய்யும் தொண்டர் - சுற்றத்து தோழிமார் எல்லாரும் 105 திவ்யதேச எம்பெருமான்கலும் பள்ளி கொள்ளுமிடம் திருவரங்கம்.
12. அனைத்தில்லத்தாரும் அறிந்து - சாத்தின சாத்தாத 10கொத்து பரிவாரங்களை நியமித்து எம்பெருமானார் திருவரங்கத்தை நிர்வகித்து போந்த படி இங்குதான்.
13. பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் - பிள்ளைகள் திருவரங்கம் காவிரிக்க கரையில் அன்ன கூட உற்சவம் விளையாடும் போது ஜீயோ! என்று அழைக்க , எம்பெருமானார் மணல்சோற்றை தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தமருகந்தது எப்பேர் மற்றப்பேர் என்பதாக அதை பிரசாதமாகவே நினைத்து பெற்றறுக் கொண்ட சரித்திர சங்கேத்யம். 14. வாய் பேசும் நங்காய் நாணாதாய் நாவுடையாய் - வாயழகர் என்னரங்கத்து இன்னமுதர்; திருவரங்கர் தாம் பணித்த மெய்மை பெரு வார்த்தை ; பேசி இருப்பனவைகள் பேர்க்கவும் பேறாவே ; ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ என்று எம்பெருமானாருக்கு அருளிய வார்த்தைகள் எல்லாம் அரங்கன் நாவுடைமைக்கு சான்று.
15. எல்லாரும் போந்தாரோ ? - அத்யயன உற்சவத்தில் ஆழ்வார்கள் எல்லாரும் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி இருந்து 21 நாட்கள் தமிழ்மறை திருநாள் கண்டருளுவதில் திருவரங்கம் திருப்பதி பிரதானம், காரணம் இவரே பதின்மர் பாடும் பெருமாள் . பாசுரங்களின் எண்ணிக்கை 247 போலே தமிழ் உயிர் மெய் எழுத்துக்கள் தொகையும் 247.
16. வாசல் காப்பான், கோயில் காப்பான் - உத்தர வீதி, சித்தரை வீதி, நான்முகன் கோட்டை வாசல் (ரங்கா ரங்கா கோபுரம்) கார்த்திகை கோபுர வாசல், ஆரிய படாள் வாசல் (கருட மண்டபம்), நாழி கேட்டான் வாசல் (துவஜ ஸ்தம்பம்), ஜெய விஜயாள் வாசல், திருமணத்தூண் திருவாசல் களில் உள்ள துவார பாலர், க்ஷேத்ர பாலர்கள் எழுப்பினது.
17. அம்பரமே தண்ணீரே சோறே அறம் - அரங்கனுலா சென்ற காலத்து ஆழ்வாருக்கு வஸ்திரமும், ஸ்ரீவைஷ்ணவ வெள்ளத்தானுக்கு ஈரவாடை தீர்த்தமும், ஆழ்வான் திருகுமாரர்கள் அவதரிக்க ஹேதுவாய் பிரசாதம் அனுப்பிய விருத்தாந்தங்கள் இந்த வகை கணக்கு.
18. உன் மைத்துனன் பேர்பாட(வசவு பாட) - ஸ்ரீரங்கம் பங்குனி உத்திரமுதல் நாள் நடக்கிற பிரணய கலக்கத்தன்று அனைவரும் நாச்சியார் பரிகரமாக நின்று, அரங்கனை ஏசினபடிக்கு .
19. மைத்தடம் கண்ணினாய் - உல்லாச பலவித (பட்டர்) , சேதனனை அருளாலே திருத்தும். ஈஸ்வரனை அழகாலே திருத்தும் தத் இங்கித பராதீன : நம்பெருமாள். (ஆழ்வான்) என்று ஸ்ரீரங்க நாச்சியார் வைபவம் .
20. செப்ப முடையாய், திறலுடையாய் - நம்பி இராமானுசனை முதலில் அரையர்மூலம் நேர்மையாக கேட்டு பெறாது போக, இரண்டாம் முறை காஞ்சி தேவப்பெருமாளை பாட்டுக்கு போர இசைய வைத்து , ஸ்ரீரங்கம் அழைத்துக் கொண்ட திறல் = சாமர்த்தியம் அரங்கனுக்கே அன்றோ?
21. ஏற்ற காலங்கள் எதிர் போங்க - முதலில் ஆழ்வாரைக் கொடுத்தார். அவர் பவிஷ்யத் ஆச்சாரியரைக் கொடுக்க, அந்த ராமானுசர் எதி புனராவதாரமான மாமுனிகள் எதிர் பொங்கி மீதளித்த பிரபாவம், முதலில் கொடுத்த அரங்கனுக்கே ஆச்சாரியனான படி இது.
22. செங்கண் சிறுச்சிறிதே - திருப்பாணாழ்வார் - காரியவாகி புடை பரந்து என்று பாடிய படி. உய்யக் கொண்டார் வழி ஆளவந்தாருக்கு ராஜ்ய வியாபாரத்தை விட்டு சம்பிரதாயத்துக்கு ஆக்கின படி; பிள்ளை உறங்காவில்லி தாஸர் பொன்னாச்சியோடு அரங்கனுக்கு ஆட்பட்டது ராமாநுசர் சொல்லிக் காட்டிய அக் கண்ணழகுதானே.
23. சீரிய சிங்கம் போதருமா போலே - நடைக்கு கோயில். குடைக்கு பெருமாள் கோயில். வடைக்கு திருமலை. முடிக்கு யாதவாத்ரி பிரசித்த மிறே.
24. அன்றிவ் உலகம் அளந்தாய் - எல்லை மண்டபம், ஜீபயர்புரம், உறையூர் என்று எல்லை நடந்து அளந்தது திருவானைக் காவல் கோஷ்டியாரிடம் இருந்து மீட்டது.
25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒருத்தி மகனாய் ஒளித்து வளர - ராமானுசர் கைப்பிள்ளையாய் பிறந்து பிள்ளை லோகாச்சார்யார் மகனாய் ஜோதிஷ்குடியில் ஒளித்து வளர்ந்தது.
26.மார்கழி நீராடுவான், மேலையார் செய்வனகள் - மார்கழி நீராட்டமாகிற அத்யயன உற்சவமான திருவாயமொழித் திருநாளாக நம்பெருமாளிடம் பிரார்த்தித்து திருமங்கை ஆழ்வார் தொடங்கி வைக்க , நாதமுனிகள் காலத்தில் பகல் பத்து நாளும் சேர்த்து அது 21 நாள் உற்சவமாக ஆயித்து. அதுவே நமக்கு மேலையார் செய்வனகள் ஆயிற்று.
27. நாடு புகழும் பரிசு - ஸ்ரீரங்க விமானத்தோடு பெரிய பெருமாளை , பெருமாள் விபீஷணனுக்கு கொடுத்தது. உபய விபூதியையும் எம்பெருமானார் இட்ட வழக்காக்கி அவரை உடையவர் என்று நியமித்தது இவை பார் புகழும் பரிசு.
28. சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே - முதலியாண்டான் - வாங்கீபுரத்து நம்பி பேச்சு - பெருமாள் உற்சவமாக எழுத்தருளும்போது என்ன பாடினீர் என்ன, ஜெய விஜயீ பவ ஸ்ரீரங்க விபோ ஜெய ஜெய என்றேன் என்ன - நெய் உண்பீர் , பாலுண்பீர், பட்டுடுப்பீர், நூறு பிராயம் புகுவீர் என்று இன்னொருவர் சொல்ல, முரட்டு சமஸ்கிருத பெரிய பேர்கள் இங்கு எதற்கு என்று, வர்த்திக்கிற தேசத்தைக் கொண்டு அத்தை சிறுபேறாக அவர்கள் கணிசத்தபடி.
29. பொற்றாமரை அடியே போற்றும் பொருள் - ரங்கமணி பாதுகா பிரபாவம் பற்றி ஸ்வாமி நிகமாந்த தேசிகன் 1000 ஸ்லோகம் பண்ணக் கூடிய மகிமை. ஆசன பத்மத்திலே அழுத்தின திருவடி அவன் கைவிட்டாலும், அவன் பாதுகையான நம்மாழ்வார் இல்லை மாறன் அடிபணிந்துய்ந்த எம்பெருமானார் கைவிட மாட்டார் என்கிற பெருமையும் கொண்ட திருவடி அரங்கனுடையது.
30. ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கண் திருமுகத்து சொல்வது திருமாலால் - பட்டர்- அனந்தாழ்வான் ஸம்வாதம். ஸ்ரீ வைஷ்ணவ திவயதேசங்கள் பலதும் இருக்க பட்டரோ ஸ்ரீரங்கநாத பக்ஷபாதி. எப்படி என்றால் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி ஆயிரமும் வான்திகழும் சோலை மதிள் அரங்கர் வான் புகழ்மேல் ஆன்ற தமிழ்மறை ஆயிரம் என்று அங்கு சொன்னது போல திருப்பாவை முப்பதும் அன்ன புகழ் புகழ்புதுவை ஆண்டாள் அரங்கர்க்கு பன்னு திருப்பாவை என்று ஸ்ரீரங்கநாதன் விஷயமாக்கி தனியன்கள் சாதித்தார். அவரைப் பார்த்து அன்னத்தாழ்வான் ஒருமுறை, நீர் வைகுந்தம் சென்றால் அங்கு பராமநாதன் த்விபுஜனாக இருந்தால் சேவிப்பீரா, சதுர் புஜனாக இருந்தால் சேவிப்பீரா என்று வினவ, அதற்கு பட்டர் சதுர் புஜனாக இருந்தால் நம்பெருமாள் என்று நினைப்பேன். த்விபுஜனாக இருந்தால் பெரிய பெருமாள் என்று நினைத்து சேவிப்பேன். பெரிய பெருமாளாகவோ, நம்பெருமாளாகவோ சேவை தரவில்லை என்றால், கூரயைப் பிய்த்துக் கொண்டு ஸ்ரீரங்கத்துக்கே குதித்து விடுவேன் என்றாராம். அதை நிரூபிக்கும் வகையில் ஆண்டாளும் நான்கு திருத்தோள் என்று சொல்லாமல் ஈரிரண்டு மால்வரைத் தோள் மாதவன், கேசவன் என்றது நம்பெருமாள், பெரிய பெருமாளாக நினைத்து அவள் பாடினாளாகக் கூறலாம்.
மாதவன், கேசவன் - ஆண்டாளை திருக்கல்யாணம் பண்ணி அங்கப் பறை கொண்ட மன்னார் - அரங்கன் தாமே.
-- Excerpts from Sri U. Ve. Velukkudi Swami Discourse 2020.
P.C. Venkatagiri Ravichandran.
-- தாசரதி தாஸன் , (அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாஸ தாஸன்.